வியாழன், 1 ஜனவரி, 2015

பால்குடி உறவுகள் மணந்தால்

பால்குடி உறவுகள் தெரியாமல் மணந்தால்


நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்ச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். (புஹாரி 88)



மஸ்ஸத்  என்ற அரபி வார்த்தைக்கு உறிஞ்சி குடித்தல் என்பது தான் அர்த்தம்  ஆனால்  மார்பில் வாய் வைத்து என்று சொல்ல முடியாது கறந்து டீ (தேநீர் ) போட்டு குடிக்கலாம் என்று கூறும்  அர்ஹம் மௌலவி  போன்றவர்களிடம்  கேட்கப்பட வேண்டிய கேள்வி

ஒரு கணவன் ,மனைவியை பிரிக்க நினைக்கும் ஒருவர்  உங்கள் இருவருக்கும் நான் டீ  போட்டு கொடுத்தேன் அதை நீங்கள் குடித்தீர்கள்  ஐந்து தடவைக்கு மேல் நான் உங்களுக்கு பால் டீ கொடுத்து விட்டேன் அதனால் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ கூடாது என்று சொன்னால்  மேலே உள்ள ஹதீஸின் படி இருவரும் விவாகரத்து செய்ய வேண்டுமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக