தவ்ஹீத்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வோரிடையே தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஏனைய ஜமாஅத்திற்குமிடையில்
சூனியம் என்ற ஒன்று, மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் பங்கை வகிக்கிறது.
'சூனியம் என்ற ஒன்று இருக்கிறது; அது இருப்பதால்தான் அல்லாஹ் சூனியம் பற்றி சொல்லிக்காட்டுகிறான்; ஆகவே சூனியம் இல்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒன்றை மறுப்பதாகும்; சூனியக்காரன் வைத்த சூனியம் அல்லாஹ் நாடாமல் பலிக்காது; ஆனால் அல்லாஹ் நாடினால் பலிக்கும்' என்பது அவர்களின் வாதம்.
'சூனியம் என்பது இருக்கிறது; ஆனால் சூனியம் என்பதற்கு நீங்கள் வைக்கும் விளக்கமும் அதன் மீதுள்ள உங்கள் நம்பிக்கையும் தவறு; அதை செயல்படுத்த அல்லாஹ் நாடமாட்டான்; அல்லாஹ் நாடுவான் என்று நீங்கள் சொல்வது தவறு' என்று இஸ்லாமிய அடிப்படைகளின் மூலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுதிபட சொல்கிறது.