வியாழன், 1 ஜனவரி, 2015

குர்ஆனுக்கு முரண் - இறந்தவர்கள்

சனது சரியாக இருந்தால் போதும் மதன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற கொள்கை உள்ள குன்றுகளுக்கு ஒரு கேள்வி 

1697. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் (கப்று) வேதனை செய்யப்படுகிறார்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.) "இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தாரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால், (குறைஷித் தலைவர்களான) இணைவைப்பாளர்கள் பத்ருப்போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்க,) "நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.

"நான் அவர்களுக்குச் சொல்லிவந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ("இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று சொல்லவில்லை).
பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்:

(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80).
(நபியே!) மண்ணறைகளில் (கப்று) இருப்பவர்களை உங்களால் செவியுறச்செய்ய முடியாது (35:22).
"நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)" என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அபூஉசாமா (ஹம்மாத் பின் உசாமா பின் ஸைத்-ரஹ்) அவர்கள் அறிவித்த (முந்தைய) ஹதீஸே முழுமையானதாகும். 

இந்த முஸ்லிம் ஹதீஸில் இப்னு உமர் ரலி சொல்வதாக ஆயிஷா ரலி அவர்களிடம் ஒரு ஹதீஸ் அறிவிக்க படுகிறது அறிவிப்பாளர் தொடர் சரியான அந்த காலத்தைய சஹாபிய மக்கள் ஆயிஷா ரலி அவர்களிடம் சொல்லிய போது அவர்கள் இந்த சஹீஹான ஹதீஸை என்ன கூறி மறுக்கிறார்கள் ??

இதில்  கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன வெனில் சம்மந்த பட்ட கிணற்று அருகில் இருந்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல் )அவர்களும் உமர் ரலி அவர்களும் ஆவார்கள் இவர்கள் இருவரும் பேசிய விஷயத்தை தான் நேரடியாக காதில்  வாங்கிய உமர் ரலி அறிவிக்கிறார்கள் அன்னை ஆயிஷா ரலி அந்த  இடத்தில் இருக்க வில்லை ஆனாலும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள் என்பதை கவனிக்கவும்

குரானுக்கு முரண் 

இந்த ஒற்றை காரணம் போதும் ஒரு ஹதீஸ் என்பது வஹி என்ற தரத்தில் அமைந்த சஹீஹான ஹதீஸா அல்லது அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் குரானுடன் மோதும் என்றால் தள்ளுபடி பண்ண வேண்டிய ஹதீஸா என்பதை அளவெடுக்க 

குரானுடன் மோதினால் ஒரு ஹதீஸை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதன் முதல் சொல்லியவர் பிஜே தான் என்று இப்போது சொல்லிக்கொண்டு கிளம்பி இருக்கும் வாய் வாளருக்கு இந்த கேள்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக