வியாழன், 1 ஜனவரி, 2015

ஷேர் வாளர்களே எங்கே சென்றீர் ??

ஷேர்வாளர்களே எங்கே சென்றீர் ?
இன்று ஆயிவாளாராகி போன அப்பாஸ் அலி முகநூலில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். தான் ஏன் தவ்ஹீதை விட்டு வெளியேறினேன் என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் சகோ பிஜே அவருக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதம் தவ்ஹீத் ஜமாத்தினுடைய கொள்கை பிடிப்பை எப்படி பறைசாட்டுகின்றது என்பதை கூட விளங்காமல் ஏதோ அவரின் வாதத்திற்கு வலு சேர்க்கும் என்று நம்பி இதை இவ்வளவு நாளும் வெளியிட வேண்டாம் என்றுதான் எண்ணி இருந்தேன்.. வெளியிட வேண்டிய சூழ்நிலை வந்ததால் வெளியிடுகிறேன் என்று ஒரு பில்டப் வேறு !
தமிழில் எழுதப்பட்ட ஒரு கடிதம் சொல்லும் சேதி என்ன என்பதை கூட அறிந்துக் கொள்ளாத ஒருத்தனையா அரபி புலமையில் சிறந்த ஆய்வாளன் என்று நாங்கள் இவ்வளவு நாள் நம்பி இருந்தோம் ??
விரைவில் நடுத்தெருவில் எதிர்பார்க்கிறோம்.!
Abbas Ali Misc
1 hr ·
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …
அன்பான சகோதரர்களே…
எனக்கும் சகோதரர் பீஜே அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை என்ன? நான் ஏன் டிஎன்டிஜேவிலிருந்து வெளியேறினேன்? இதில் உண்மை நிலவரத்தை நான் தெளிவுபடுத்தியுள்ளேன்.
ஆனால் டிஎன்டிஜேவில் இன்னும் சில சகோதரர்கள் என் விசயத்தில் தவறான காரணங்களை கற்பித்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு முழுக் காரணம் சகோதரர் பீஜே அவர்கள் தான்.
எனவே இது தொடர்பாக என்னிடத்தில் உள்ள ஆதாரத்தை வெளியிடுவது தான் நல்லது என முடிவு செய்துள்ளேன். இதை வெளியிடக்ககூடாது என்று இது காலம் வரை மறைத்து வந்தேன். ஆனால் இப்போது வெளியிட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.
என் மீது பீஜே நடவடிக்கை எடுத்து எனக்கு அனுப்பிய மெயிலை பாருங்கள். நான் டிஎன்டிஜேவிலிருந்து வெளியேறியதற்கான உண்மைக் காரணத்தை அறிந்துகொள்வீர்கள். இதில் பீஜே அவர்கள் என்னைப் பற்றி தவறாக புரிந்துகொண்டு எழுதிய சில விசயங்களும் உள்ளது.
நான் டிஎன்டிஜேவில் இருந்த போது சிஹ்ர் சம்பந்தமாக அதிகமாக பேசினேன். அப்போது அது தான் சரி என்ற கொள்கையில் இருந்தேன். மறு ஆய்வு செய்யக்கூடிய நேரத்தில் நாம் முன்பு சொன்ன கருத்துக்கள் தவறு என்று தெரிந்தது. இந்த மாற்றம் வந்து ஒரு சில வாரங்களில் இதை நவம்பவம் 13 2014 அன்று நடந்த மசூராவில் நான் தெரிவித்த உடன் நான் முன்பு பேசிய பேச்சுக்கள் அனைத்தும் நடிப்பு என்று சகோதரர் பீஜே தவறாக எண்ணிவிட்டார்.
மேலும் நான் மசூராவில் பேசும் போது நமது ஆய்வில் தவறு இருந்தால் நமக்கு ஒரு கூலியும் சிஹ்ர் தொடர்பான ஹதீஸை நம்பக்கூடியவர்களுக்கு இருகூலியும் அல்லாஹ் தருவான். அவர்கள் நம்பியது தவறு என்றால் அவர்களுக்கு ஒரு கூலியும் நமக்கு இரு கூலியும் தருவான். எனவே இந்த விசயத்தில் யாரையும் முஷ்ரிக் என்று சொல்லக்கூடாது என்று கூறினேன்.
பீஜேவை அல்லாஹ் நரகத்தில் போடுவான் என்று நான் சொன்னதாக பீஜே அவர்கள் தவறாக புரிந்துவிட்டார்.நான் அவ்வாறு சொல்லவில்லை. 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
பி.ஜைனுல் ஆபிதீன்
To
syed ibrahim
CC
Asrafdeen deen kovai RAHIM kovai rahmathulla MI SULAIMAN TNTJHO and 17 more...
14 Nov 2013
அன்புள்ள சகோதரர் அப்பாஸ் அலி அவர்களுக்கு பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிக்
கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும்.
புன்படும்படி நீங்கள் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தும் நான் உங்கள்
மீது கொண்ட அக்கறையை நினைவுபடுத்தியும் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல்
கிடைத்தது.
நான் புன்படும்படி நீங்கள் பேசி இருந்தால் அது போல் நானும் தான்
பேசினேன். மற்றவர்களும் பேசத்தான் செய்தோம். காரசாரமான பேச்சுக்கள் வரும் போது இது தவிர்க்க முடியாதது என்பதால் யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதைவிடக் கடுமையான விமர்சனங்கள் நிர்வாகக்
குழுவில் நடந்துள்ளன. அதை நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை.
நீங்கள் என்னை எந்த முறையில் பேசி இருந்தாலும் கடுகளவும் அதை நான் கணக்கில் கொள்ள மாட்டேன்.
ஆனால் எனக்கு அதைவிட வேறொரு வருத்தமும் கோபமும் உள்ளது. உங்கள் மெயிலுக்குப் பின் அது மேலும் அதிகமானதே தவிர குறையவில்லை.
நான் புன்படும் வகையில் நீங்கள் பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கும் நீங்கள்
• மறுமையில் சிஹ்ர் கூட்டத்துக்கு இரு கூலியை அல்லது ஒரு கூலியை அல்லாஹ் கொடுப்பான் என்றும், நம்மை நரகத்தில் போட்டுவிட்டு சிஹ்ர் கூட்டத்துக்கு சொர்க்கத்தை அளித்தாலும் அளிக்கலாம் என்றும் நீங்கள் கூறியதும்
• எனக்கு உடன்பாடு இல்லாததால் சிஹ்ர் கும்பலுக்கு எதிரான
நிகழ்ச்சிகளுக்கு என்னைப் பயன்படுத்துவதை தவிர்க்கவே விரும்பினேன் ஆனால் முடியவில்லை என்று நீங்கள் சொன்னதும்
• உடன்பாடு இல்லாத சிஹ்ர் பற்றி எதிர்த்து நீங்கள் எழுதியதும்
பேசியதும் மற்றவர்களை விட அதிக அளவில் பேசியதும் எழுதியதும் நடிப்புத் தான் உள்ளத்தில் உள்ளதல்ல என்பதை தெள்ளத்தெளிவாக நீங்கள் போட்டு
உடைத்ததும்
• நமக்கு தவறு என்று பட்டாலும் மற்றவர்கள் பார்வையில் அதற்கு
ஆதாரம் உள்ளதால் அவர்களைக் குற்றம் பிடிக்கக் கூடாது என்ற புது உசூலைக் கண்டு பிடித்து தாவாக்களத்தின் அடித்தலத்தை அடித்து நொறுக்கும் வகையில்
நீங்கள் பேசியதும் ஆகியவை தான் என்னைப் புன்படுத்தின.
இத்தனை காலம் கொள்கையில் கூட நம்பிக்கையில்லாமல் உள்ளொன்று வைத்து வெளியே ஒன்று பேசிக்கொண்டு இருந்த ஒருவரை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியாமல்
இருந்தோம் என்று தான் நான் வருத்தம் அடைந்தேன்.
நீங்கள் மட்டுமின்றி நம் உலமாக்களில் பெரும்பாலானவர்கள் என்னிடம் இது குறித்து பேசிய போது என்னைப் புன்படுத்தும் விதமாக நீங்கள் பேசியது குறித்து எனக்குச் சமாதானம் சொன்னார்கள்.
அவர்களுக்கும் நீங்கள் சொன்ன புதுக் கொள்கை கடுகளவு கோபத்தை ஏற்படுத்தவில்லை.
எது பயங்கரமான குற்றமோ அது சாதாரணக் குற்றமாகக் கூட ஆலிம்களில் அதிகமானவர்களுக்குத் தெரியவில்லை.
கொள்கைக்காக அவர்கள் பேசுவது என்றால் எனக்கு வந்த கோபம் அவர்களுக்கும் வந்திருக்க வேண்டும்.
உங்களுக்கு ஆறுதல் சொன்னவர்கள் கூட நீங்கள் பீஜேயிடம் இப்படி
பேசியிருக்கக் கூடாது என்று தான் உங்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
எவ்வளவு பயங்கரமான கொள்கையைப் பேசியுள்ளீர்கள்? தவ்ஹீதின் அடித்தளத்தையே தகர்த்து விட்டீர்கள் என்று உங்களிடமும் அவர்கள் கூறவில்லை. என்னிடமும் கூறவில்லை.
அப்பாஸ் அலி பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறுகின்றனர்.
என் சம்மந்தப்பட்ட விஷயமாக இது அவர்களுக்கும் தோன்றுகிறது. உங்களுக்கும் தோன்றுகிறது. மார்க்க விஷயமாகத் தோன்றவில்லை.
ஓரிரு உலமாக்கள் விதிவிலக்காக உள்ளனர்.
உலமாக்களாக இல்லாதவர்களில் அதிகமானவர்கள் மார்க்க விஷயமாகக் கருதி உங்களின் விபரீதக் கொள்கைக்கு எதிராக வாதங்களை வைத்தார்கள். ஆனால் உலமாக்களில் அதிகமானோர் எனக்கும் உங்களுக்கும் இடையிலான சண்டை என்று
அதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை மக்களுக்குப் புரியவைப்பதில் நாம் ஓரளவு வெற்றி பெற்றதாக நினைத்தாலும் அடிப்படைக் கொள்கைகளில் யாருக்கு அதிகப் பிடிப்பு இருக்க வேண்டுமோ அவர்கள் விஷயத்தில் இந்த ஜமாஅத்
தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்று தான் நான் கருதுகிறேன்.
மாலை போடும் விஷயத்துக்காக மண்டையைப் பிளக்கும் வாதம் செய்தவர்களுக்கு வழிகேடர்களுக்கும் இணை கற்பிப்பவர்களுக்கும் அல்லாஹ் சொர்க்கத்தைக் கொடுத்து நமக்கு நரகத்தைக் கொடுப்பான் என்று நீங்கள் சொன்னது எருமை மாட்டின் மேல் மழை பெய்த உணர்வைக் கூட கொடுக்கவில்லை.
தமுமுக, ஜாக், ஹாமித் பக்ரி, பாக்கர் உள்ளிட்ட அனைவரும் சொன்னது என்ன?
பீஜே என்ற ஒருவன் சொன்னான். அவன் சொன்னதை எதிர்த்தால் நம்மை ஒழித்து விடுவான் என்பதற்காக நாங்கள் சகித்துக் கொண்டு இருந்தோம் என்று சொன்னார்கள்.
நம்மோடு எஞ்சி இருப்பவர்கள் அப்படி அல்ல என்று நான் நினைத்தேன்.
அதுவும் தவறு என்பது சமீபகால நிகழ்வுகள் மூலம் எனக்குத் தெரிகிறது. உடன்பாடு இல்லாவிட்டாலும் பீஜேக்காக அதை எதிர்க்க முடியவில்லை என்பதுதான் அதிகமானோரின் கருத்து. அதை நான் சமீபகாலமாகப் புரிந்து கொண்டேன்.
பொதுமக்கள் சரியாக இருந்தாலும் - தாயிகளும் முக்கிய பொறுப்பில்
உள்ளவர்களும் எனக்காகத் தான் ஒரு கொள்கையை ஆதரிக்கிறார்கள் என்றால் அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் நான் வியாபாரத்தில் முழுமையாக இறங்கினேன்.
திடீரென ஒதுங்கிக் கொண்டால் என்னை வைத்து இன்னொரு இயக்கம் என்பார்கள். அப்போதும் அதன் முடிவு இப்படித்தான் இருக்கும்.
நான் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு போய்விட்டேன் என்று மக்கள் நினைத்தாலும் பரவாயில்லை. நம் தலயீடு கடுகளவும் இல்லாததாக – எனக்குப் பயப்படாமல் அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்படும் நிர்வாகம் அமையட்டும் என்பதற்குத்தான் வியாபாரத்தில் ஈடுபட்டேன். எனக்கு பணத்தாசை எல்லாம் கிடையாது. அல்லாஹ்
தந்திருப்பது எனக்குப் போதுமானது என்ற மனநிறைவு எனக்கு உள்ளது.
எனது பதவிக்காலம் முடியும் நாட்களை நான் எண்ணிக் கொண்டு இருக்கிறேன். அதன் பின்னர் யாரும் எந்தக் கருத்தையும் சொல்லலாம்.
பீஜெக்குப் பயந்து உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் நிலை ஏற்படாது.
பீஜேக்கு எதிலும் கருத்து சொல்லவோ தலையிடவோ வாய்ப்பு இருக்காது. நாம் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் அந்த ஆளிடம் யார் திட்டு வாங்குவது என்று யாரும் பயப்பட இனி அவசியம் இருக்காது.
அண்ணன் தவறையும் சரியாக்கி விடுவார் என்ற பேச்சு என் முன்னாலும் நானில்லாத சபையிலும் நடப்பது எனக்குத் தெரியும். அதற்கும் இனிமேல் இடமிருக்காது.
பீஜேக்கு பயந்து கொண்டுதான் அவரது கருத்தை எதிர்க்காமல் உலமாக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் நிலை இனி ஏற்படாது.
இதுபோன்ற விமர்சனங்கள் தான் என்னைப் புன்படுத்தியது.
தங்களுக்கு எது சத்தியம் என்று தெரிகிறதோ அதை பேசிய நம் தாயிக்கள், எவ்வளவு பெரிய சக்தியையும் அஞ்சாமல் எதிர்த்த நம் தாயிக்கல் தங்களுக்குச் சரி என்று பட்டதை எனக்குப் பயந்து சொல்லாமல் இருப்பதாக அவர்கள் வாயாலே
சொல்வது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
அப்பாஸ் அலி அவர்களே நீங்கள் என்னைப் பற்றி பேசியதற்காக வருத்தப்பட வேண்டாம். அவர்களைப் போல் இல்லாமல் காலம் கடந்தாவது வெளிப்படையாகப் பேசினீர்கள். அப்படி பேசியது சத்தியமாக இருந்தால் அதை நான் முதலில் ஏற்று
இருப்பேன்.
ஒரு கற்பனைக் கதை என் நினைக்கு வருகிறது. பிள்ளைக்கு பேச்சுவராமல் இருக்கிறது என்று தாய் பலவாறாக சிகிச்சை செய்து பேசும் சக்தி பிள்ளைக்கு வந்ததாம். இப்போது பிள்ளை பேசப்போகிறது என்று ஆவலுடன் காத்து இருக்கும் போது அம்மா நீ எப்போது தாலி அறுப்பாய் என்று பிள்ளை பேசியதாம்.
இதுபோல் தான் உங்கள் பேச்சும் அன்றைக்கு இருந்தது.
உண்மையில் ஜமாஅத் தவறாக முடிவெடுத்த விஷயங்கள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டினால் அதை மகிழ்வோடு நான் ஏற்றுக் கொள்வேன்.
உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன் என்ற ஹதீஸ் பற்றி நீங்கள் மறுப்பு எழுதினீர்கள். நானோ மற்றவர்களோ கோபப்படவில்லை. அதை தீன்குலப் பெண்மணியில்
இம்மாதம் போட்டோம். நானும் சரிபார்த்து திருத்தம் செய்து கொடுத்தேன்.
இது போல் ஏராளமான உதாரணங்கள் இருந்தும் பீஜே சொல்வதை எதிர்த்தால் அவ்வளவுதான் என்ற பொய்வாதத்தை ஆலிம்கள் செய்வது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.
உங்களுக்கும் அதிகமான உலமாக்களுக்கும் இது பீஜேயின் பிரச்சனை என்று தோன்றினாலும் இப்போது உள்ள நிர்வாகக் குழு அதை மார்க்க விஷயமாகப் பார்க்கிறது.
நீங்கள் சொன்ன விஷயங்களை இப்போதைய ஜமாஅத் கடுமையான குற்றமாகக் கருதுகிறது. நீங்களும் நீங்கள் சொன்ன விஷயத்தில் தெளிவடைந்து ஜமாஅத்தின் நிலைக்கு நீங்கள் வரும் வரை மக்கள் மன்றத்தில் உங்களைப் பயன்படுத்தப்படாமல் இருப்பது தான் ஜமாஅத்துக்கும் நல்லது. உங்களுக்கும் நல்லது.
நீங்கள் சொன்ன கருத்து பயங்கர வழிகேடு என்று ஜமாஅத்துக்கு தெரியும் போது உங்களை பயன்படுத்துவதும் நீங்கள் அதற்கு உடன்படுவதும் சந்தர்ப்பவாதமாக ஆகி விடும்.
நீங்கள் சொன்னது வழிகேடு அல்ல என்று எங்களுக்குத் தோன்ற வேண்டும். அல்லது நீங்கள் சொன்னது வழிகேடுதான் உங்களுக்கு இயல்பாக வரவேண்டும். அது வரை இந்த நிலைதான் நல்லது. சரியானது.
எனது பதவிக் காலத்துக்குப் பின்போ அல்லது எனக்குப் பின்போ உங்கள் கருத்தே ஜமாஅத்தின் கருத்தாக ஆகலாம். (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.) அப்போது உங்களைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
ஒரு ஜமாஅத்தின் கொள்கையில் நம்பிக்கை இல்லாமல் உடன்பாடு இல்லாமல் அந்த ஜமாஅத்தின் கொள்கைப் பிரச்சாரகராக நீங்கள் நீடிக்க வேண்டாம்.
உங்கள் மீது தனிப்பட்ட கோபம் இல்லை. கொள்கை சம்மந்தமான கோபம் உள்ளது.
உங்கள் கொள்கை பகிரங்க வழிகேடு என்பதால் அது வழிகேடு இல்லை என்று எங்களுக்குத் தெரியும் வரை அல்லது உங்கள் கொள்கை வழிகேடு என்று நீங்களாக உணர்ந்து மாறும் வரை இந்த நிலைதான் நீடிக்க வேண்டும்.
இந்த மெயில் உயர்நிலைக் குழுவில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் நான் அனுப்பவில்லை. இனியும் அனுப்ப மாட்டேன். நீங்களும் யாருக்கும் அனுப்பாமல் இருந்தால் நல்லது. அனுப்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
அன்புடன்
பீ.,ஜைனுல் ஆபிதீன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக