ஞாயிறு, 26 ஜூலை, 2015

குர்ஆனுக்கு முரண்

புஹாரி இமாம் பதிவு செய்து விட்டாரா? நான் பேச மாட்டேன்.
அறிவிப்பாளர் சரியானவரா? நான் எதிர்த்து பேச மாட்டேன்..
என்று தனி நபர்களை அல்லாஹ்வாக ஆக்கும் சலஃபி மதுஹப்காரர்களுக்கு கீழ் காணும் ஒரு சாம்பிள் உதாரணம் சமர்ப்பணம் !
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தம் கணவனால் தலாக் விடப்பட்ட போது அவர்களுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவது ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவருக்குக் கடமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஃபாத்திமா(ரலி) அவர்களே குறிப்பிடுகிறார்கள். முஸ்லிம் (2953)
ஆனால் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை கணவன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குர்ஆனில் உள்ளது. எனவே குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். முஸ்லிம் (2963)
ஃபாத்திமா (ரலி) அவர்களின் நம்பகத் தன்மையில் உமர் அவர்கள் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவில்லை. குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும் ஒரு போதும் மோதாது என்பது உறுதியான விஷயம்.
எனவே மறதியாக ஃபாத்திமா அவர்கள் தான் மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
இதிலிருந்து நாம் எழுப்பும் கேள்விகள் :
---------------------------------------------------------
நம்பகமான அறிவிப்பாளர் ஒன்றை அறிவித்து விட்டால் அதை மறுக்கவே கூடாது என்கிற வாதம் உண்மையென்றால் நம்பகமான அறிவிப்பாளரான
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் கூற்றை உமர் அவர்கள் என் அப்படியே ஏற்கவில்லை?
அதை ஏன் குர் ஆனோடு உரசிப் பார்த்தார்கள்?
நம்பகமானவர்கள் என்று இவர்கள் சொல்லும் அறிவிப்பாளர்கள் அல்லாஹ்வால் நம்பகமானவர்கள் என்று சான்று அளிக்கப்பட்டவர்களில்லை..
அப்படிப்பட்டவர்களின் பேச்சுக்கே அப்பீல் இல்லையாம்.
ஆனால், இங்கே ஒரு செய்தியை அறிவிப்பது நம்பகமானவர்களில் உயர்ந்த இடத்தில் இருக்கும் சஹாபி,
அல்லாஹ்வால் நற்சான்றிதழ் அளிக்கப்பட்ட‌வர். !!
அவரும், இதை நபி (சல்) அவர்கள் என்னிடம் சொன்னார்கள் என்று சொல்லித் தான் சொல்கிறார்.!!!
அப்படியானால், நம்பகமானவர்களிலேயே உயர்ந்த் இடத்தில் வைக்கப்பட வேண்டியவர் இவர்.
அப்படியானால் இது எப்படி பொய்யாகிப் போகும்?
நம்பகமானவர் அறிவித்து விட்ட பிறகு அதை மறுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் வழிகெட்டவர்கள் என்றால் உமர் (ரலி) அவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் ஃபத்வா என்ன ????
தவறான அறிவிப்பை செய்த ஃபாத்திமா பிந்த் கைஸ் அவர்களின் ஏனைய அறிவிப்பை ஏற்றுக் கொள்ளலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக