புதன், 25 மார்ச், 2015

அபூலஹபின் கைகள் அழிந்தன


1. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். (அல்குர்ஆன் 111:1)

111:1   تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ

அபூலஹபின் கைகள் அழிந்தன என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.

ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், '(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?' என்று அவர் கேட்டார். "உங்களைவிட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார். நூல்: புஹாரி (5101)

புஹாரியில் இடம் பெற்ற இந்த ஹதீஸ் அபூலஹப் விரல்களுக்கு தண்ணீர் புகட்டப்படுகிறது என்று சொல்கிறது.

*** வஹி ஒன்றுடன் ஒன்று முரண்படாது! ***

53:3   وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. (அல்குர்ஆன் 53:3)





53:4   إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ 
அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 53:4)

என்று அல்லாஹ் சொல்லியிருக்க, அதனுடன் ஹதீஸ் என்ற பெயரில் ஏதாவது முரண்பட்டு வந்தால் அது புஹாரியில் வந்தாலும் அது ஹதீஸே இல்லை என்பதே சரியான கொள்கையாகும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக