அரஃபா நாளும் அரஃபா நோன்பும்
அரஃபா நாள் என்பது இஸ்லாத்திற்கு முந்தய ஜாஹிலியா காலத்தில் இருந்தே வழக்கில் இருந்த ஒரு சொல் .
இஸ்லாத்திற்கு பிந்தய ஹிஜ்ரி எட்டு வரை அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் கூடினார்கள் என்றோ ஹாஜிகள் கூடினார்களா? என்று ரசூல் ஸல் அவர்கள் அரஃபா மைதானத்திற்கு ஆல் அனுப்பி பார்க்க விட்டார்கள் என்றோ எந்த ஆதாரத்தையும் பார்க்க முடியாது
ஹிஜ்ரி ஒன்பதில் அபூபக்கர் ரலி அவர்கள் தலைமையில் அலி ரலி அவர்களும் சென்று அரஃபா தினத்தில் கூடினார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டு ஹிஜ்ரி ஒன்பதில் தான் அரஃபா மைதானத்தில் கூடுவது கட்டாய கடமை ஆக்கப்பட்டது
ஹிஜ்ரி பத்தில் தான் ரசூல் ஸல் அவர்கள் முதல் மற்றும் இறுதி ஹஜ் செய்தார்கள் இதில் தான் இறுதி பேருரை ஆற்றினார்கள் பெரும்பாலான ஹஜ் விதிமுறைகள் இதில் தான் கடமையாக்கப்பட்டது
அதே நேரம் ஹிஜ்ரி ஒன்பது வரை அரஃபா தினத்தன்று அதாவது அரஃபா மைதானத்தில் கூடாமல் அல்லது கூடியதற்கான ஆதாரமே இல்லாத அரஃபா தினத்தில் அல்லது கூடுவது கட்டாயமே அல்லாத அந்நாளில் பிறை ஒன்பதில் ரசூல் ஸல் அவர்களுடன் முஸ்லீம்கள் நோன்பு நோற்று வந்தார்கள் என்பதும் தெளிவு இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.!
இஸ்லாத்தில் உள்ள அனைத்து நோன்புகளும் பிறையை மையப்படுத்தியே வந்துள்ளது ஆனால் பிறை ஒன்பது அன்று அரஃபா நோன்பு வையுங்கள் என்று ரசூல் ஸல் அவர்கள் சொல்ல வில்லை என்பதால் ஹாஜிகள் கூடும் பிறை எட்டில் நோன்பு வைத்து விட்டு பிறை ஒன்பதை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டு பிறை பத்தில் பெருநாள் கொண்டாடுவது சரியா?
ஹாஜிகள் ஹிஜ்ரி 9 க்கு பிறகே அரஃபா மைதானத்தில் கூடினார்கள் என்பது வரலாறு அப்படி இருக்கும்போது ஹிஜ்ரி ஒன்பது வரை ரசூல் ஸல் அவர்கள் நோன்பு வைத்திருந்தார்களே அதில் எதுவும் உங்களுக்கு சந்தேகம் இருக்க வில்லை தானே?
இந்த நேரத்தில் இஸ்லாத்தை முன்னிருத்தி யோசித்து பார்த்தால் அரஃபா நாள் என்பது பிறை ஒன்பதில் தான் என்பது இஸ்லாத்திற்கு முன்பே வழக்கத்தில் இருந்தது அதை மாற்றாமல் அப்படியே ரசூல் ஸல் அவர்கள் பின்பற்றினார்கள் என்பதும் தெளிவு
ஆக அரஃபா நாள் என்பது ஹாஜிகள் கூடும் நாள் அல்ல இஸ்லாத்திற்கு முந்தய அரஃபா நாள் என்ற வழக்கத்தில் இருந்த சொல் தான் என்பதும் அது பிறை ஒன்பதாம் நாள் தான் என்பதும் தெளிவு
அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் கூடும் நாள் தான் உலகத்தில் அனைவருக்கும் அரஃபா தினம் அன்று தான் நோன்பு வைக்க வேண்டும் என்று வாதம் வைப்போர் ஹிஜ்ரி ஒன்பது வரை ரசூல் ஸல் அவர்கள் வைத்த நோன்பிற்கு என்ன பதில் வைத்துள்ளனர் என்பதையாவது சிந்திக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக