கேள்வி பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வி பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 மார்ச், 2023

ரமலான் மாதத்தை ஆரம்பிக்கவும், முடிக்கவும் மிக அடிப்படையானதும், அவசியமானதும் எது?

  அல்லாஹ்வுடைய மார்க்கமான இஸ்லாம் முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஓர் அழகிய வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு விஷயங்களையும் எப்படி அணுகவேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ள இஸ்லாம், தினசரி நேரக் கணக்குகளை சூரியனை அடிப்படையாக வைத்தும், மாதக் கணக்குகளை சந்திரனை அடிப்படையாக வைத்தும் தீர்மானிப்பதை நமக்கு சொல்லித் தருகிறது. 

இதில் சூரியக் கணக்கு என்பது ஒரு நாளின் ஐவேளைத் தொழுகை நேரங்களை வரையறுப்பதற்கு நேரங்காட்டியாகவும், சந்திரக் கணக்கு என்பது நோன்பின் நாட்கள், ஹஜ்ஜுடைய நாட்கள், இத்தாவின் நாட்கள் மற்றும் சில இபாதத்துகளின் நாட்களைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு காலங்காட்டியாகவும் பயன்படுத்த இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது.

அதனடிப்படையில்.. ரமலானை ஆரம்பிப்பதற்கும்,  ரமலான் மாதம் முடிந்து ஷவ்வாலின் முதல் நாள் ஆரம்பித்துவிட்டது என்பதை (அதாவது நோன்புப் பெருநாளை) அறிந்துக் கொள்வதற்கும் பிறைப் பார்ப்பது மிக அவசியம். ஏனெனில், 'ஒவ்வொரு பகுதியிலும் பிறைக் காணப்பட வேண்டும்; பிறை தென்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகிவிட்டது; தென்படாவிட்டால் அம்மாதத்தின் நாட்களை முப்பது என்று நிறைவு செய்துக்கொள்ள வேண்டும்' என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ள மிகத் தெளிவான சட்டமாகும்.

ஞாயிறு, 10 ஜூன், 2018

வெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..

வெளி நாடுகளில் வசிப்பவர்கள் அங்கே பிறைப் பார்த்த அடிப்படையில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு, ரமலான் முடிவதற்குள் தாயகம் திரும்பி வந்தால் நோன்பின் எண்ணிக்கை 31 ஆகிவிடுகிறது. இவர்கள் எவ்வாறு நோன்பு வைக்க வேண்டும்?

ஒருநாள் முன்னதாக பிறையைக் கண்டதால் ரமலான் நோன்பை ஆரம்பித்தவர்கள் ஒரு நோன்பு கூடுதலாக நோற்றுவிட்டு தாயகம் வரும்போது, அங்குள்ள நாள் கணக்கின்படி நோன்பை தொடர வேண்டும். அதாவது, தாயகத்துக்கு வந்துவிட்டால் ஏற்கனவே இருந்த பகுதியையோ, வெளி நாட்டையோ பின்பற்ற இயலாது.

ஏனெனில் குறிப்பிடப்பட்ட நேரம் மற்றும் நாட்களைக் கணக்கிட்டு நிறைவேற்றப்படும் அமல்களான தொழுகை, நோன்பு போன்ற காரியங்களை நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின்படியும், பிறைக் கண்ட நாளின் அடிப்படையிலும்தான் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டில் இருப்பவர் வேறொரு நாட்டின் நேரக் கணக்கைப் பின்பற்ற முடியாது. அதுபோன்று ஒரே நாட்டுக்குள் உள்ள தொலைதூர ஊர்களுக்கு மத்தியிலும் அதிக வித்தியாசமான நேரக் கணக்கு அமைந்திருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்படியானால், தங்கள் பகுதியில் முந்திய நாள் பிறைக் கண்டு ரமலானின் முதல் நோன்பை ஆரம்பித்தவர்கள், மறுநாள் ரமலானின் முதல் பிறையைக் கண்டு நோன்பை ஆரம்பித்த வேறொரு பகுதிக்கோ அல்லது நாட்டுக்கோ வந்து அங்கே தங்களின் நோன்பைத் தொடர்ந்த பிறகு, ரமலானின் இறுதியில் 30 நோன்பையும் அவர்கள் நிறைவேற்றிவிட்ட நிலையில் அந்தப் பகுதியில் பிறைக் காணாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


ஞாயிறு, 20 மே, 2018

"ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறுபவருக்கு...

"ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறுபவருக்கு எவ்வாறு மறுமொழி கூறவேண்டும்?

ஒருவர் நமக்கு ஏதேனும் ஒரு உதவி செய்தால் அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒரு சிறிய பிரார்த்தனையை இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது. ஒருவரை நாம் சந்திக்கும்போது முகமன் கூறுவதற்காக சொல்லக்கூடிய ஸலாம் என்பது எவ்வாறு ஒரு பிரார்த்தனையாக அமைகிறதோ அதேபோல, நமக்கு உதவி செய்தவருக்கு நாம் கூறும் வாசகமும் அவருக்கு ஒரு துஆவாக அமைந்துவிடுகிறது. அந்த பிரார்த்தனையின் மூலம் நாம் அவரின் உதவிக்கு நன்றி செலுத்தியவராகிவிடுகிறோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

حدثنا الحسين بن الحسن المروزي بمكة و إبراهيم بن سعد الجوهري قالا حدثنا الاحوص بن جواب عن سعير بن الخمس عن سليمان التيمي عن أبي عثمان النهدي عن أسمة بن زيد قال : قال رسول الله صلى الله عليه و سلم من صنع إليه معروف فقال لفاعله جزاك الله خيرا فقد أبلغ في الثناء

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கு (மற்றொருவரால்) நல்லுபகாரம் செய்யப்பட்டால் அவர் தனக்கு (நல்லுபகாரம்) செய்தவருக்கு "ஜஸாக்கல்லாஹு ஹைரா" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) என்று கூறினால், அவர் (உதவி செய்தவருக்கு) மிகச்சிறந்த நன்றியைச் செலுத்திவிட்டார்.

அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி)
நூல்: திர்மிதீ (2035)

 

உதவி செய்தவர்களுக்கு இவ்வாறு "ஜஸாக்கல்லாஹு ஹைரா" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) என்று நாம் கூறியவுடன் அதற்கு மறுமொழியாக,

- "பாரக்கல்லாஹு ஃபீக்கும்" (بارك الله فيكم)
- "வஇய்யாக" (وإياك)
- "வஜஸாக்கும்" (وجزاكم)
- "ஜமீஆ" (جميعا)
-  "வஜஸாக்குமுல்லாஹு பில்மிஸ்லி" (وجزاكم الله بالمثل)
- "அஹ்ஸனல்லாஹு இலைக்" (أحسن الله إليك)
- "ஜஸாக்கும் இய்யாஹு" (جزاكم اياه)

என்று பலவிதமான பதில்களைக் கூறும் வழக்கம் மக்களுக்கு மத்தியில் இன்று நடைமுறையில் காணப்படுகிறது. ஆனால் "ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறியவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு பதில் கூறியுள்ளார்களோ அதைத் தவிர வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி நாம் பதில் கூறுவது நிச்சயமான முறையில் "பித்அத்" ஆகும்.

"ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறியவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதற்கு சில நபிமொழிகள் ஆதாரங்களாக எடுத்து வைக்கப்படுகின்றன. அவற்றில் பல அறிவிப்புகள் பலஹீனமானவையாக உள்ளன. ஆனாலும் கீழுள்ள ஒரு அறிவிப்பு மட்டும் ஸஹீஹானதாக உள்ளது.

சனி, 2 செப்டம்பர், 2017

குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்?

கேள்வி: குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்?

பதில்: இஸ்லாத்தின் பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்துள்ளன. அதாவது நோன்புப் பெருநாள் தினத்தில் "ஸதகத்துல் ஃபித்ரு" என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பதுபோல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் "உள்ஹியா" என்று சொல்லப்படும் "குர்பானி" கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது.

குர்பானியின் முழுமையான சட்டதிட்டங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கவும்.

குர்பானி சம்பந்தமாக சமூக வலைதளங்களில் நம்மிடம் கேட்கப்படும் மற்ற சில சந்தேகங்களுக்கான தெளிவுகளை கேள்வி பதில்கள் பகுதியில் கொடுத்து வருகிறோம். அதன் வரிசையில் குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்? என்ற கேள்விக்கான பதிலை இங்கே காண்போம்.


குர்பானி கொடுக்கப்படும் பிராணியின் தோலை மத்ரஸாக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளுக்கோ, தொண்டு நிறுவனங்களுக்கோ ஜமாஅத் நிர்வாகிகளிடமோ மக்கள் கொடுத்து வருகின்றனர். இவற்றில் எவையெல்லாம் மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் முடிவு செய்யவேண்டும்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும்போது கணவன் மரணித்துவிட்டால்...

கேள்வி: ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும் பெண்மணியின் கணவன் மரணித்துவிட்டால் இத்தாவை எப்படி கடைபிடிக்க வேண்டும்? ஹஜ் கிரியைகளை அந்த பெண்மணி எவ்வாறு நிறைவேற்றுவது?


பதில்:

"இத்தா" என்ற பெயரில் மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறைகளும் மூடநம்பிக்கைகளும் மக்களிடம் வேரூன்றிப் போயிருப்பதால்தான் இப்படியான சந்தேகங்களும் வருகின்றன. கணவனை இழந்த பெண்கள் தங்கள் மறுமணத்தைத் தள்ளிப்போட்டு (காத்திருக்கும்) குறிப்பிட்ட காலகட்டம்தான் "இத்தா" என்பதாகும். அதனால் ஒரு பெண்மணி ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றிருக்கும்போது கணவன் மௌத்தாகிவிட்டால் தன் ஹஜ் கிரியைகளைத் தொடர மார்க்கத்தில் எந்த தடையுமில்லை.

அதேபோல, எல்லாப் பெண்களுக்கும் எவையெல்லாம் இத்தாவின் சட்டங்களாக சொல்லப்படுள்ளதோ அந்த சட்டங்கள்தான் ஹஜ்ஜில் உள்ள பெண்மணிக்கும் பொருந்தும். அதாவது, இத்தாவுக்காக வரையறுக்கப்பட்ட அந்த நான்கு மாதங்கள் பத்து நாட்களுக்குள் சில விஷயங்களை மட்டும் இஸ்லாம் தடை செய்கிறது.